தமிழக விவசாயிகளிடம் இருந்து தோத்தாபுரி மாம்பழம் கொள்முதல்; மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல்
புதுடில்லி: தமிழகத்தில் இருந்து கொப்பரை தேங்காய் மற்றும் தோத்தாபுரி மாம்பழங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதன் வாயிலாக, பெங்களூரா எனப்படும் தோத்தாபுரி மாம்பழம் கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். கிலோ 5 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்த நிலையில், மா விவசாயிகளுக்கு இது பெரும் ஆறுதல் அளிக்கும்.
இதுகுறித்து வேளாண் அமைச்சகத்தின் அறிக்கை:
தமிழகத்தில் கொப்பரை மற்றும் தோத்தாபுரி மாம்பழ விலை வீழ்ச்சி கண்டு, விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.
நடப்பாண்டின் சந்தை நிலைப்படுத்தல் திட்டத்தின்கீழ் 96,879 டன் தோத்தாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவை முற்றிலும் தமிழகத்தில் இருந்து ஒரு குவின்டால் 1,545.41 ரூபாய் விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேலும்
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
-
முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
அணைகள் நீர்மட்டம்
-
ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி