முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்

20


சென்னை: சட்டசபை தேர்தலுக்குப் பிறகு முதல்மறையாக முதல்வர் விஜய் நாளை கரூர் செல்கிறார். அங்கு 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தவெக தலைவர் விஜய், முதல்வரான பிறகு முதன் முறையாக நாளை கரூர் செல்ல உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

அதன்பிறகு, மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடியில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியாரின் எவர்கிரீன் கோதாரி காலணி தயாரிப்பு நிறுவனத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

தொடர்ந்து, வெண்ணெய்மலையில் உள்ள, தனியாருக்கு சொந்தமான, 'அட்லஸ்' கலையரங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் நாளை வழங்க உள்ளார்.

முதல்வர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் அமரும் வகையில், பிரமாண்ட கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை தமிழக முதல்வர் விஜய் கரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவதையொட்டி, பிரமாண்ட பேனர்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.


@block_Y@

முறையீடு



கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவுக்கு எதிராக மதுரையைச் சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், அரசுப்பணி வழங்கப்படுவது விதிகளுக்கு எதிரானது எனில், அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர்block_Y

Advertisement