தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை
சென்னை: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, தன்னிடம் சபாநாயகருக்கு எதிராக ஓட்டளிக்குமாறு சிலர் தொலைபேசியில் பேரம் பேசியதாக புகார் அளித்தார்.
இது குறித்து, சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, 'யூ- டியூபர்' திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உட்பட எட்டு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமாருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எம்எல்ஏவிடம் பேரம் வழக்கில் கைதான முக்கிய 5 பேரை சென்னை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை வளையம் விரிவடைந்து வருகிறது. திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ரமேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையிலும் நீதி துறையிலும் இரண்டு திராவிட கட்சியின் ஆயிரக்கணக்கான குண்டர்கள் இருக்கிறார்கள்.
அம்பு எய்தவனை விட்டுவிடுங்கள். மற்றவர்களை துன்புறுத்துங்கள்
அவ் வேலு சிங்கப்பூர் சென்ற மர்மம்
நல்ல டாக்டர் ஊசி போடுவாரு! கெட்ட டாக்டர் கிட்னி திருடுவாரு! இதுல வர்ர டாக்டர் இது ரெண்டுமேயில்லாம புதுசா ஒரு வேலைய பாத்து விட்ருப்பார் போலயே? ஏனுங்க ஆபிசர் இது டாக்டரோட நிக்குமா? இல்ல இன்ஜினியர்,சித்தாளு, கொத்தனாருன்னு கதை நீளுமா?
த.வெ.க அரசை கவிழ்க்க உள்ளூர் சதி என்று சொன்னவர்கள் இப்போது அதனை சிங்கப்பூர் வரை கொண்டு சென்று விட்டார்கள். விட்டால் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாத்தையும் சேர்த்து கதையை நீட்டித்து விடுவார்கள் போல. காலக் கொடுமை.
எனக்கு ஒன்னு புரியலே, இந்த மை னாரிட்டி அரசுதான் வந்ததில் இருந்து காங்கிரஸ், விசிக, முஸ்லீம் league , கம்யூனிஸ்ட் கட்சி ஆட்களை சோபா கொடுத்து அணி மாற வைத்தது. மேலும், அதிமுக ஆட்களை ராஜினாமா செய்ய வைத்து இடை தேர்தலில் பெரும்பான்மை பெற குதிரை பேரம் நடத்தி வருகிறது. இதில் திமுக குதிரை பேரம் செய்ய அவசியம் என்ன?
இதை சொன்னா மக்கள் நம்மை தான் திட்டுவார்கள் ... அந்த லெவல் மக்கள் செல்வாக்கு இருக்கு
அதாவது, திருடனே திருடன் திருடன் என கூச்சலிட்டு கூட்டத்தினுள் ஓடியது போல என சொல்வதுண்டு, அந்த வேலையை தான் மைனாரிட்டி அரசு செய்கிறது. இதை சொன்னால் குத்தம் என பினாத்த வரிசைகட்டி வருவானுவ.
இரண்டு விஜயபாஸ்கர்களை உங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டு நீங்கள் எப்படி திமுக ஊழல் வாதிகளின் மீது வழக்கு தொடுப்பீர்கள் எப்படி அவர்களை கைது செய்ய முடியும். அவர்கள் ஜாமீன் வாங்குவதில் ஜாம்பவான்கள். ஆட்சி மாறினாலும் திமுக தீய சக்திகளின் கொட்டம் அடங்கவில்லை. அவர்களுக்கு ஆயுள் கால ஜாமீன் கிடைக்கும் எப்போதும் போல் கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொள்வார்கள். வழக்கு ஜாமின் எல்லாம் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
வழக்கு போட்டுட்டு மக்களை இதை பற்றியே"பேச வைத்திட்டு நீங்க நோகாம ஊழல் சக்திகளிடம் இருந்து ஆட்களை இழுத்திடுங்க?
தளபதி சொன்ன மாதிரி ஊழல் செய்த பணத்தில்"பங்கு வாங்கிகொண்டு?மேலும்
-
காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை காய்கறி விலை நிலவரம்
-
ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
-
வட துருவமும் தென் துருவமும் எப்படி ஒன்றாக முடியும்; திருமாவுக்கு வைகோ கேள்வி
-
முறைகேடு வழக்கு; எ.வ.வேலு ஜூலை 15ல் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
-
அணைகள் நீர்மட்டம்
-
ரூ. 8.5 கோடி சம்பளத்தில் வேலை: உதறிவிட்டு சொந்த நிறுவனம் துவக்கிய ஐஐடி பட்டதாரி