மீன்பிடி தொழிலாளர் சங்கம்  கடலுாரில் ஆர்ப்பாட்டம் 

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில், மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். பொருளாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், ஜீவாநந்தம், வைத்திலிங்கம், அரசப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

பரங்கிப்பேட்டையில், கடலுக்கு அடியில் ைஹட்ரோ கார்பன் கிணறு அமைப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ைஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

Advertisement