லஞ்சத்துக்கு எதிரான முதல் அடி: முதல்வர் விஜய் குரலுக்கு உங்கள் ஆதரவை கமென்ட் செய்து சொல்லுங்க!

409



நமது நிருபர்




''யாரும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள். யாராவது கேட்டால் இது விஜய் ஆட்சி என்று கூறுங்கள்,'' என்று முதல்வர் விஜய் கரூரில் நேற்று வேண்டுகோள் விடுத்தது, லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் அடி. நாட்டின் எதிர்கால நலன் கருதி இத்தகைய குரலுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

அரசு அலுவலகங்களில் எங்கும் எதிலும் லஞ்சம் நீக்கமற இருக்கிறது. எந்த ஒரு செயல் அரசு ஊழியரால் ஆக வேண்டும் என்றாலும் பணம் கொடுக்காமல் நடக்காது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஏழை எளியவர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை, மக்கள் அரசு அலுவலகங்களில் அடையும் துயரங்கள் கொஞ்ச லஞ்சம் இல்லை.


லஞ்சம் வாங்குவதற்காக அலைக்கழிக்க வைப்பது, தராதவர்களை எடுத்தெறிந்து பேசுவது, லஞ்சம் கொடுத்தவர்களுக்காக எல்லா விதிமுறைகளையும் வளைப்பது எல்லாம் அரசு அலுவலகங்களில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்கு யாராவது தீர்வு காண மாட்டார்களா என்று வேதனையுடன் மக்கள் இருந்த வேளையில் தான், லஞ்சத்துக்கு எதிராக விஜய் தலைமையிலான தவெக அரசு, முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது.
நாட்டில் இதுவரை எந்த முதலமைச்சரும் செய்திடாத ஒரு செயலை நேற்று கரூரில் விஜய் செய்திருக்கிறார்.

யாரேனும் லஞ்சம் கேட்டால் தராதீர்கள். கேட்டால் இது விஜய் அரசு என்று சொல்லுங்கள் என்ற அவரது பேச்சு, லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு அலுவலகங்கள் எங்கும் புரையோடி போன லஞ்சத்தால் வாடி வதங்கி வேதனைப்பட்டு நிற்கும் மக்களுக்கு ஆறுதலாக முதல்வர் விஜயின் வார்த்தைகள் உள்ளன.

எனவே அவரது குரலுக்கு வலு சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
லஞ்சம் தராமலும், லஞ்சத்துக்கு எதிராக போராடுபவர்களை ஊக்குவிக்க வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் பணி.

கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!
இது பற்றிய உங்கள் கருத்து என்ன? முதல்வர் விஜய் நேற்று கரூரில் நிகழ்த்திய லஞ்சத்துக்கு எதிரான உரை பற்றி உங்கள் கருத்தை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!

Advertisement