போதை மாத்திரை சப்ளை முக்கிய குற்றவாளி கைது 

கோவை: சுண்டக்காமுத்துார் சாலையில் அதிகாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகிக்கும் படி நின்று இருந்தவரிடம் சோதனை செய்தனர். அவரிடம், மூன்று கிலோ கஞ்சா, 230 போதை திரவம் பாட்டில், 192 போதை மாத்திரைகள் இருந்தன. பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது, குற்றவாளி பெயர் பொள்ளாச்சி பாஸ்கர், 48 என்பதும், கோவையில் கஞ்சா, போதை மாத்திரை பார்சலில் இறக்கி சப்ளை செய்வதில் முக்கிய குற்றவாளி எனவும் தெரியவந்துள்ளது. இவரை கைது செய்து விசாரிக்கின்றனர் 

அதே போல், பெரியகடை வீதி போலீசார் உக்கடம், ராமர் கோவில், காய்கறி மார்க்கெட் பகுதியில் சந்தேகிக்கும் படி நின்று இருந்த, புல்லுக்காடு பகுதி ஷாருக்கானிடம், 25  போதை மாத்திரைகள் 50 பறிமுதல் செய்து கைது செய்தனர். 

Advertisement