எண்கள் சொல்லும் செய்தி

8,900




ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், ஐ.டி., நிறுவனமான டி.சி.எஸ்., 8,900 ஏ.ஐ., தொழில்நுட்ப பொறியாளர்கள் குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பணியாளர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

200,00,00,000



ஜப்பானை சேர்ந்த நீர் சுத்திகரிப்பு நிறுவனமான டெய்கி ஆக்சிஸ், இந்தியாவில் தனது மூன்றாவது உற்பத்தி ஆலையை கர்நாடக மாநிலம், தும்கூருவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.

150,00,00,000



மும்பையில் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மின்சார படகுகளை தயாரிக்க 150 கோடி ரூபாயில் உற்பத்தி மையம் அமைக்க ஜோயா மரைன் நிறுவனத்துடன் மகாராஷ்டிரா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

70,000





ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்டீல், அணுசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக நவீன் ஜிண்டால் குழுமம் அறிவித்துள்ளது.

Advertisement