ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகளை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊசுடு தொகுதியை சேர்ந்த முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி பொறையூர் மற்றும் அகரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று முதியோர்களுக்கு இலவச போர்வைகள் மற்றும் காலணிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தொகுதி காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
-
ஈரானில் மருத்துவமனை அருகே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; தொடரும் பதற்றம்
-
லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்
-
உ.பி., பல்கலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு
-
ஜவுளி உற்பத்தியை விரைவுபடுத்த ரூ.21,000 கோடிக்கு மெஷின் இறக்குமதி; ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பு காரணம்
-
வரும் 30, 31ல் கரூரில் ஜவுளி தொழில் வாங்குவோர், விற்போர் சந்திப்பு; வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கலாம்
Advertisement
Advertisement