லஞ்ச ஊழல் புகார் எதிரொலி; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை மாநகராட்சியில் தீவிர ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சோதனைகளைத் தொடர்ந்து, முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், நான்கு பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன. டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்ச புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யார் மீது நடவடிக்கை
* 2025-2026ம் ஆண்டில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்குப் போலியான ரசீதுகளைச் சமர்ப்பித்த மணலி மற்றும் மாதவரம் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் தேவிகலா, உள்விசாரணைக்குப் பிறகு ஜூலை 9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* ஷெனாய் நகரில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் நிபுணராகப் பணியாற்றும் சிவ பொற்கொடி மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு இளைஞரிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றதற்காக ஜூலை 11ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* கட்டட உரிமையாளர் ஒருவரிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் கேட்டதற்காக மாதவரம் மண்டல உதவிச் செயல் பொறியாளர் ஆனந்தராவ்
ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மாநகராட்சி சாலைப் பணியாளர் பாஸ்கர், முறையான அனுமதி பெற்றிருந்த கட்டட உரிமையாளர் ஒருவரை, கட்டடத்திற்கு பூட்டி சீல் வைப்பதாக மிரட்டி ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக ஜூலை 10ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
* ராயபுரம் மண்டலத்தில் இயந்திரவியல் துறை ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து பில் கணக்கு முடித்து பணம் பெற்று தருவதற்கு லஞ்சம் கேட்டதற்காக, NULM பணியாளரான கண்ணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுமட்டுமின்றி, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நான்கு அதிகாரிகள் மீதும் துறை ரீதியான உள்விசாரணை துவங்கியுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது: எந்தவொரு அதிகாரியும், லஞ்சமோ அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத ஆதாயங்களையோ கோரினால், அது குறித்து நேரடியாக என் கவனத்திற்குக் கொண்டு வரலாம்.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன். ஊழல் விவகாரத்தில் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார், என்றார்.
பிரத்யேக வீடியோ!
அதிரடி ஆக்ஷனில் தமிழக அரசு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
உண்மை தான்.
தார்மீக ரீதியில் தாடிக்கார பஞ்சாபிஅதிகாரி தானே பொறுப்பு.அவரை ஏன் விசாரிக்கவில்லை.
சென்னை மாநகராட்சியில் ஊழல் புறிந்த அதிகாரிகளுக்கு விசாரணையை கன்னகுமாரியில் நடத்தி அவர்கள் எப்படி லஞ்சத்திக்காக சாதாரண மக்களை அலையவிட்டார்களோ அதே போல் அவர்களை அலைய விடவேண்டும்.
பத்திரப்பதிவுத்தாள் மற்றும் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் முதலியனவற்றை நிர்ணயக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பவர்களையும் தடுக்கவேண்டும். இவைகள் மான்புமிகு நீதிமண்ற வாளாகங்களிலேயே குறிப்பிட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஊழல் மிகுந்த துறை கூட்டுறவுத்துத் துறை மற்றும் அந்தத் துறையால் நிர்வகிக்கப்படும் பொது விநியோகத்திட்டம் என்று பலர் பேசிக்கொள்கிறார்கள். இந்தத் துறையில் சாதாரண மக்களை விட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் கடைநிலையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் துறை அதிகாரிகளால் ஊழல் மற்றும் லஞ்சத்தினால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இத்துறையில் இதுவரை யாரும் மாட்டாமல் இருப்பது வியப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
லஞ்சம் கொடுத்து விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும்
ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்எல்ஏ ஒப்பந்ததாரரை டயர் சரியில்லை என்று முரட்டுகிறார். அரசாங்க வாகனங்களில் எல்லாம் புது டயர்களிலேயே ஓடுகிறதா? இது ஒரு மாமூல் கேட்கும் டெக்னிக் அல்லவா? ஒப்பந்தக்காரர் மீது தவறு இருந்தால் ஒப்பந்ததாரரை கண்டிக்க வேண்டும் அல்லது எம்எல்ஏ மீது தவறு என்றால் எம்எல்ஏவை கண்டிக்க வேண்டும். இதில் எது சரி எது தவறு
ஒருவர் மீது புகார் வந்தவுடனேயே அவரை அந்த பிரிவில் இருந்து உடனடியாக மாற்றிவிடவேண்டும். அந்த பிரிவில் தொடர அனுமதிக்கக்கூடாது. கீழ்நிலை பணியாளர்கள் என்றால் தாலுகா விட்டு வேறொரு தாலூக்காவுக்கு மாற்றிட வேண்டும். அதிகாரிகள் என்றால் மாவட்டத்தில் இருந்து மற்றோர் மாவட்டத்துக்கு மாற்றிட வேண்டும். நகராட்சி , மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அதிகாரிகள் என்றால் வேறு ஒரு நகராட்சிக்கோ மாநகராட்சிக்கோ மாற்றிடவேண்டும். புகார் மீதான விசாரணையில் லஞ்சம் வாங்கியது ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் பணியிடை நீக்கம் கிடையாது , உடனடி டிஸ்மிஸ் என்று அரசு அலுவலகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பவேண்டும். எல்லாஇடத்திலும் மேலே சரி ஆக்கினால் கீழே சரியாகிவிடும் என்பார்கள். அரசு அலுவலகங்களில் கீழ் நிலையை சரிபண்ணினால் மட்டுமே மேலே மாற்றமுடியும். ஏன் என்றால் கோப்புகளை தயார்பண்ணுவதே கீழ் நிலை ஊழியர்களும் , அதிகாரிகளும்தான். அவர்கள் மாட்டேன் என்றால் மேலே கோப்புகள் எப்படி மேலே நகரும். ??? எந்த ஒரு அலுவலகத்திலும் அலுவலக சூப்பிரெண்டு , நிர்வாக அதிகாரி என்று ஒருவர் இருப்பார். அவருடைய கையெழுத்து இருந்தால் மட்டுமே கோப்புகள் உயர் அதிகாரிகளின் மேசைக்கு மேலே நகரும். அவருக்கு தெரியாமல் எதுவும் இருக்காது. தலைமை அதிகாரிக்கு கோப்புகளை தயார் பண்ணும் வேலை தெரிந்தாலும் செய்யமாட்டார். கையெழுத்து மட்டுமே போடுவார். . தப்பை முதலில் செய்பவர்கள் கீழ் நிலை ஊழியர்களும் கீழ் நிலை அலுவலர்களும் அதிகாரிகளும்தான். இங்கே அடித்தால் அங்கே வலிக்கும். எனவே தப்பு ஆரம்பிக்கும் இடத்தில் அடிக்கவேண்டும்.
இப்ப சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழல்வாதிகள், லஞ்சலாவன்யர்கள், அவர்கள் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குபவர்களை எட்டப்பன் மாதிரி காட்டிக்கொடுக்கவேண்டும். அரசுக்கு வேலை சுலபமாகும். செய்வார்களா... ?
ஜோக் ஒன்று உண்டு. மறந்தும் ரிப்பன் பில்டிங் தூணில் சாய்ந்து விடக்கூடாது. ஏனென்றால் அதற்கும் லஞ்ஜம் கொடுக்க வேண்டும். கார்பரேஷனில் அவ்வளவு லஞ்ஜம் ஊழல் மலிந்து உள்ளது.மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்