தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
சென்னை: தனியார் நிறுவனம் ஒன்று, வங்கியில், 1,109 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில், பல இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரை தலைமையிடமாக வைத்து, 'குப்தா பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இதன் கிளைகள், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரகண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ளன.
இந்த நிறுவனம், ஒடிஷாவில் உள்ள வங்கி ஒன்றில், 1,109 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள, தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் நான்கு பேரின் வீடுகள், தமிழகத்தில் திருவள்ளூர், ஒடிஷாவில் புவனேஸ்வர், உத்தரகண்ட் காஷிப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதனடிப்படையில் தொடர் விசாரணை நடக்கிறது என, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
கடன் வாங்கிய நிறுவனம் செலவுககளை வங்கி கண்காணிக்கவேண்டும். கடன் திரும்ப பெறும்வரை வங்கியும் அந்த நிறுவனத்தில் அனைத்து உரிமை உள்ள உறுப்பினராக வேண்டும்.
வங்கி உயர் அதிகாரிகள், வக்கீல்கள் வாழ்க்கையில் கொண்டாட்டம்தான்.
Gupta power infrastructure manufactures power cables, conductors, LED lighting, operating manufacturing plants in Odisha, Uttarakhand, and Tamil Nadu. Also, ute and turnkey EPC projects in power sector.
There is tough competition now in power sector. Also, manufacturing facilities in all the 3 states are in low operation but reasonable stocks. Payment for supplies are not received for the past 8 months for about 400 crores and interest on loans are tough to be paid with poor cash flow.
FRAUD if any is not directly found. Only, funded amount plus interest by Canara Bank is not supported by enough stock and receivables, resulting in interest payment defaults. Installments commenced and yet the company is unable to make the break through in revenue operations . Inappropriate Funding of GPIL apart from Canara Bank is the issue, which is pulling down the financial strength. Most of the Guptas try to fly high like vulture and do not understand they remain crow.
CBI is a tool to find irregularity. Forensic Audits in India are not scientific.
Stock valuations manipulation are stories. Canara Bank failed to access the cash flow analysis for the size of funding at Monthly intervals and takes sudden step towards recovery.
Diversion of funds in any company happens to 5-10% thru remuneration, perks and bogus advertisement costs and marketing commission paid, apart from fictious employees on pay roll. Happening of this type of diversion after 3-5 years of stabilizing is not considered a big violation. The same thing during the initial stage of availing funding always makes losses and cash flow deficit for operations.
In such cases, the company should be allowed to sell its real estates slowly with back to back repayments upto 75-90% of sale proceeds
தனியார் நிறுவனத்தை நம்பி எப்படி 1109 கோடி ருபாய் எப்படி கொடுத்தீங்க?அதற்கு என்ன supporting document கதையெல்லாம் பேசிக்கிட்டு இல்லாம, அவனுடைய சொத்துக்கள் அனைத்தையும் முடக்கவும் அதைப்போல் வங்கிக் கணக்குகளை முடக்கவும் passport ஐ முடக்கவும், இதுக்கப்புறம், அங்க ஓடிப் போயிட்டான். இங்க ஓடிப் போயிட்டான் அப்படிங்கிற வேலை வேண்டாம் உடனே தூங்காம உடனே செய்யவும் சுறுசுறுப்பாக செயல்படவும், அதற்குத் துணை சென்ற வங்கி அதிகாரிகள், அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யவும். இது ஒரு வகையான அரசின் மெத்தன போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். காலங்காலமாக இது நடந்து கொண்டிருக்கின்றது வங்கியில் கடனை வாங்கிக்கொண்டு அயல்நாட்டில் சென்று, அங்கு ஏகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு உதாரணம் விஜய் மல்லையா, லலித் மோடி, சுக்ஷி எண்ணற்ற எமாற்றுப் பேர்வழிகள் லண்டனில் இருக்கிறார். திருடர்கள் வெளிநாட்டில் சென்று settle ஆகியுள்ளார்கள் அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வர, இந்தியா படாத பாடு படுகிறது. அதற்கு ஏகப்பட்ட செலவுகளைச் செய்கிறது. அதற்கான பலன் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
நண்பரே, நீங்கள் உபதேசம் செயதது போல் எதுவும் நடக்காது வழக்கம் போல் மெயின் குற்றவாளி நாட்டை விட்டு ஓடி விடுவான் அவன் ஏற்கனவே ஓடாமல் இருந்திருந்தால் இந்த பிராட் வேலையில் வாங்கி அதிகாரிகளும் உடந்தை
இந்தியாவில் ஊழல், லஞ்சம் ஏமாற்று வேலை இதில் முன்னிலை வகிக்கிறது. காரணம் நீதி துறையும் வக்கீல்களும். . வழக்குகள் குறைந்தது 10 ஆண்டுகள் நீடிக்கிறது. எதற்குமே தீர்ப்பு வருவதில்லை வந்தாலும், மேல் முறையீடு, கீழ் முறையீடு , அடி முறையீடு என்று மேலும் வழக்குகள் போய்க்கொண்டே இருக்கும். கேடுகெட்ட நீதி துறை, வஞ்சக , பொய் பேசும் வக்கீல்கள் இருக்கும் வரை நீதி, தண்டனை இந்தியாவில் கிடைக்காது
அந்த கம்பெனி ஓனர் இப்போ எந்த நாட்டுல இருக்காருன்னு சி பி ஐ கண்டுபுடிச்சுட்டாங்களா ? நாளையிலேந்து வாராவாரம் பத்திரிகைகளில் , அவருக்கு சிறை தயார், இந்தியாவுக்கு கூட்டி வரப்படுவார்ன்னு செய்தி எதிர்பார்க்கலாம் மல்லையா நியூஸ் மாதிரி.
பிஜேபி கட்சி நிதி குடுப்பார், நல்லவர் ஆகிடுவார்
மோசடியில் உலகத்துக்கே வழி காட்டுறோம் ஹை...
அப்பாவி சாம்பிராணி ஆட்களுக்கு டைம் பாம் செய்வது தான் தொழில் ஹை என ஊர் அறிந்த விஷயம் .
ட்ராவிடத்துக்கும் ஊழலுக்கும் அச்சாணியே திருட்டு ரயிலு தான் ..
மூரக்ஸ் அது ஏன் உங்க கும்பல் மட்டும் பேர் இல்லாம திரியுதுமேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்