அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழகம்: முதல்வர் விஜய் பெருமிதம்
சென்னை: இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்து வருகிறது என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழகம் சாதனை படைத்து வருகிறது.
1988ம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள்.
உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழகம் முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்தின் பெருமை. அதே சமயம் அதிகம் ஊழல் அரசியல்வாதிகள் தமிழகத்தின் சிறுமை. ஊழல் ஒழியவேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அதிகம் தமிழகத்தில் உருவாக வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியிலேயே இந்த கிராண்டு மாஸ்டர் ப்ரக்ஞானந்தா பல பரிசுகள் வாங்கி தமிழகத்திற்கு நற்பெயர் வாங்கி கொடுத்தார் அனால் அப்போதிருந்த திராவிட மாடலரசு அவர் பிராமணர் குலத்தை சேர்ந்தவர் என்ற ஓரே எண்ணத்தினால் புறம்தள்ளப்பட்டார் அவரை அழைத்து பாராட்டவே இல்லை நமது முதல்வர் விஜய் அரசு ஜாதி மதம் பார்க்காமல் தமிழகத்திற்கு பெருமை
தேடித்தந்த யாராக இருந்தாலும் அவர்களை பாராட்டி மகிழ்விக்கிறார் என்னே பெருந்தமை பாராட்டப்பட வேண்டியவர் நமது முதல்வர்
சதுரங்கம் விளையாடி வென்று தேவியை மணம் புரிந்த சதுரங்க வல்லப நாதர் திருக்கோவில் மன்னார்குடி அருகில் உள்ளது என்பதை அறியவும். இந்தியாவில் பிறந்தது சதுரங்கம்
அவர்கள் எல்லாம் உங்களின் சினிமா பைத்தியங்கள் இல்லை அது முதல் காரணம்.. உங்கள் சினிமா பைத்தியங்கள் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்டு திறிகின்றது
இதுக்கும். திராவிட மாடல் கல்வி தான் காரணம் . இ வே ரா பற்றி படித்தது தான் காரணம் .
கூவாத்தூர்ல எல்லோரும் சாப்பிட்ட பிளேட்டில் நானும் சாப்பிட்டேன் என்றும் பெருமைப்படலாம் .......
திராவிடக் கட்சிகள் ஆட்சியில் ஒரு கிராண்ட் மாஸ்டர் கூட இல்லாமல் இருந்து இப்போது விஜய் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் நாட்டில் உருவாகி இருப்பது மிகப் பெரிய சாதனைமேலும்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
-
54 ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய ஏன் தாமதம்? கோர்ட் தீர்ப்பு வந்தும் மாநகராட்சி இழுபறி
-
குளத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் அளித்த பதிலை ஏற்க முடியாது! உண்மைக்கு மாறான தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
-
பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுல், பிரியங்கா கைது! டில்லியில் பதற்றம்