விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
சென்னை: தவெக அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை எம்எல்ஏக்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model தவெக அரசு.
அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? கைது செய்யப்பட்டுள்ள சட்டசபை எம்எல்ஏ தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது போலீசாரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க...
திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மடியில் கனமில்லையேல், வழியில் பயமில்லை என்று எனது அப்பா சொல்லுவார். ஸ்டாலுக்கு அது பொருந்தும். அதுவும் நிறைய கனமாக இருப்பதால் பேசிக்கொண்டே இருக்கிறார்.
தவெக அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
என்று வினாவும் மாஜி முதல்வரே உம்மைப்பற்றி சவுக்கு சங்கர் வெளியே பேசிய பேச்சுக்கு நீங்கள் என்னென்ன செய்திர்கள் நினைவில் இருக்கிறதா அலறி அடித்துக்கொண்டு அவர் குடும்பத்தையே நாசாமாக்கிய புண்ணியவானையா நீர் இப்படி பேச எப்படித்தான் நா எழுந்ததோ தெரியவில்லை
கூட இருக்கும் எம்.எல்.ஏக்களை நல்வழியில் சரியான பாதையில் செல்ல வழி காட்ட வேண்டும் அவர்களை அடியாட்களாக பயன்படுத்தி அவர்களை மாட்டிவிட கூடாது நீங்கள் ஆட்சியில் இருந்தபோது பேசாத வார்த்தைகளா சொல்லாத சொற்களா அப்பப்பா காதால் கேட்கவே முடியாது மக்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதானிருந்தார்கள் இனி எந்த அரசும் சகிக்காது அதற்கு தகுந்த நடவடிக்கைகளை உடனே எடுத்துவிடும் யாரவது முதல்வரை தரக்குறைவாக பேசினால் அவர்களை நீங்களே கண்டிக்க வேண்டும் அவர்களை நல்வழியில் நடத்தி செல்ல வேண்டும் அதுதான் தலைவனின் நிலைமை குறிக்கோள் கடமை சொன்ன வார்த்தைகளோ மாபெருந்தவறு
விளாத்திகுளம் தொகுதி திமுக MLA மார்கண்டேயனுக்கு மன நோய் போல இனியாவது நல்லவர்களை தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள்
உம மூஞ்சியுஐய்ய காட்டாதீர் அவ்வளவு அசிங்கத்தை கைகார காரியங்க்கள் செய்த வாய். குடும்ப சொத்து சேர்த்ததது யூரியா காரி துப்புது. துப்பு கேட்ட மகனை நாற்காலியில் உட்கார எவ்வளவு சீனியர் கழகத்து நபர்களை அமுக்கி மனா குமுறனின் மீது உட்கார வைத்தீர் ?
விமரிசனம் செய்கிறோம் என்ற பெயரில் ரவுடிகள் போல பேசுகின்றனர்.அதற்கு இவர் கண்டித்து ஒழுங்குபடுத்தல் கட்சி வளர்ச்சிக்காக முட்டு கொடுக்கிறார்.
நம்முடைய ஆட்சியில் நாம் என்ன செய்தோம் என்று இந்த திருட்டு திராவிட பொறம்போக்குகள் திரும்பிப் பார்க்க வேண்டும்
முன்னாள் நிரந்தர முதல்வர் நியூஸ் போடுவது ஓகே! ஆனால் அவரது படம் தினமும் மலரில் போட வேண்டாம்! கடந்த ஐந்து ஆண்டுகளில் ஃபோட்டோ ஷூட் பார்த்து பார்த்து எரிச்சல் ஆக இருக்கிறது! இது தாழ்மையான வேண்டுகோள்!
What if someone wants to break the limbs of Stalin and Udhayanidhi? Will be ok? The best way is to "treat" Stalin, Kanimozhi, and Udhanidhi. Then, the rest will shut their mouth. Keep these people in jail on enquiry. That will be enough.
சரியான கருத்து! எரியறத பிடுங்கினா கொதிக்கிறது தானாகவே அடங்கும்! இன்னும் திராவிட அராஜக ஊழல் நாத்திக கொழுப்பு குறையவில்லை!
இது இருக்கட்டும் - 10,000 ரூபாயில் 14 நாள் லண்டன் குடும்பத்துடன் சென்று வந்த ரகசியத்தை சொல்லுங்க.. மக்களுக்கு வசதியா இருக்கும் - அவங்களும் போயிட்டு வருவாங்க - இவ்வளவு சிக்கனமாக சிலவு செய்த நம்ம முன்னாள் முதல்வர் என்று கொண்டாடுவார்கள்
நீங்கள் யோகியமாக இருந்து மற்றவர்களை குறை செய்யலாம் குறை சொல்லலாம் தவறில்லை நீங்கள் மோசமானவர்களாக இருந்து இரவோடு இரவாக youtube மற்றும் எதிர்த்துப் பேசுபவர்களை எல்லோரும் இருவோடு இரவாக கைது செய்யப்பட்டார்கள் அது மட்டும் நியாயமாமேலும்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
-
54 ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய ஏன் தாமதம்? கோர்ட் தீர்ப்பு வந்தும் மாநகராட்சி இழுபறி
-
குளத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் அளித்த பதிலை ஏற்க முடியாது! உண்மைக்கு மாறான தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
-
பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுல், பிரியங்கா கைது! டில்லியில் பதற்றம்