வீடு இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குருபிரசாத்,17; நெல்லிக்குப்பம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் வரக்கால்பட்டில் உள்ள தனது பெரியப்பா மகேஷ் வீட்டில் இரவு துாங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குருபிரசாத், மகேஷின் தாய் சரஸ்வதி,62; அவரது மகன் காமேஷ்,19; ஆகியோர் தூங்கியுள்ளனர்.

நள்ளிரவு வீட்டின் மண் சுவர் இடிந்து மூவர் மீதும் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குருபிரசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காயமடைந்த மற்ற இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement