‘கொடை’ பூங்காவில் திரண்ட மாணவர்கள்

கொடைக்கானல், ஜூலை 23-

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பள்ளி மாணவர்கள் திரண்டனர். நேற்று சென்னை, பிற மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர்.

இங்குள்ள புல்வெளி, மலர்களை ரசித்தனர். சிறுவர் விளையாட்டு திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது. மிதமான வெயிலுடன் ரம்யமான சீதோஷ்ண நிலையை அனுபவித்தனர்.

Advertisement