பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரிய மனு வாபஸ்
- டில்லி சிறப்பு நிருபர் -
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தமிழக அரசு வாபஸ் பெற்றது. இதனால், இவ்வழக்கு விரைவில் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் , கடந்த 2024, ஜூலை 5ம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீடு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக, தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த சூழலில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், 'கொலை வழக்கில் ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதால், தமிழக போலீசாரின் விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, இவ்வழக்கை சி. பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போதைய தி.மு.க., அரசு இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆட்சேபனை இல்லை
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., அரசு பொறுப்பேற்றதால், முந்தைய தி.மு.க., அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வாரம், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்புகிறோம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதில் தமிழக அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என , தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒத்திவைப்பு
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு முறைப்படி வாபஸ் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமினை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதிகள், 'இது குறித்து சி.பி.ஐ., பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
எந்த தொப்பை விசாரிச்சா என்ன? சுவறேறி குதிச்சு கைதானவனெல்லாம் இன்னிக்கி எம். பி
இவனும் திருடன் தான். போட்டுத்தள்ளிய தேட்டி செல்வம் மட்டுவானா இல்லை கூட்டணி உறவு கைகொடுக்குமா.
இந்த ஆள் சும்மா வட்டி வசூல் பண்ணி நில அபகரிப்பு பண்ணுவார்
இந்த கொலையில் சம்பந்த பட்ட அனைத்து கட்சி ரவுடிகளையும் கண்டறிந்து சுட்டு கொள்ள வேண்டும்....
இதற்காகத்தான் அரசியலில் ஒரு கட்சியை நம்பி கட்சிக்காக ஒருவரை கொலை செய்யக்கூடாது என்பது இனி உண்மை வெளிவரும் அதற்கும் கொலைசெய்த நபர் வெளிநாடு சென்று விடுவார் இதற்கு பழைய ஆண்ட கட்சி உறுதுணையாகவே இருக்கும் விரைவில விசாரணை நடத்தினால் அந்த கொலைகார பாவியை கண்டுபிடிக்கலாம்
ஆஹா இதென்ன கொடுமை.இந்த திமுகவை நம்ம்ம்பித்தானே இதனை செய்தோம் துணிச்சலாக என்று ஒரு கதர் சட்டைக்காரர் புலம்புவார். சிபிஐ விசாரணையை தடுக்க முடிந்தது அன்றைய திமுகவுடனான உறவில். இப்படி ஆகும்ன்னு யாருக்கு தெரியும். விசாரணைக்கு அந்த கதர் சட்டைக்காரர் அழைக்கப்படும்போது நம்மில் எல்லோருக்கும் தெரியும் அந்த கதர் சட்டைக்காரரரைப்பற்றி. அரசியல் கொலை இது
அப்படியே அவருக்கு எப்படி சொத்து சேர்ந்தது என்று சிபிஐ விசாரித்தால் நாட்டுக்கு நன்மை நடக்கும் , விசாரித்து அந்த சொத்தை அரசு கஜானா வுக்கு சேர்க்கணும்மேலும்
-
கடலோர காவல் படை பாதுகாப்பு ஒத்திகை
-
சந்தை விலை நிலவரம்: கச்சா எண்ணெய்/ ரூபாய் மதிப்பு
-
சந்தை விலை நிலவரம்: தங்கம்/வெள்ளி
-
தினம் ஒரு பங்கு: அம்பிகா காட்டன் மில்ஸ் லிமிடெட் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி துறை
-
நிப்டியின் இறக்கம் தொடர சற்று கூடுதல் வாய்ப்புள்ளது
-
டிரம்ப் வீசிய குண்டு: சரியும் பார்மா பங்குகள் காத்திருப்பதா; முதலீடு செய்வதா?