அப்துல்கலாமின் அசையாத அர்ப்பணிப்பு நாட்டுக்கு சேவை செய்ய ஊக்கமளிக்கிறது; ராஜ்நாத் சிங்
புதுடில்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அசையாத அர்ப்பணிப்பு, சுயநலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்ய தொடர்ந்து ஊக்கமளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி அவர் வெளியிட்ட பதிவில்; மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் ஏவுகணை மனிதர், இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை மற்றும் ராஜதந்திர பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய சிறந்த விஞ்ஞானி. தொலைநோக்குச் சிந்தனையாளருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரது எளிமையான வாழ்க்கை, நேர்மை மற்றும் நாட்டிற்கான அசையாத அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகள் கடந்து பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும், சுயநலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
தங்கம் வென்றார் ஈஷா * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்
-
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம்: எஸ்ஐடியில் பட்டய கணக்காளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
சென்னை சென்ட்ரல் அருகே ‘போதை’ மாணவர்கள் வெறியாட்டம் இருவருக்கு வெட்டு; மக்கள் அலறியடித்து ஓட்டம்
-
பட்டா இடத்தை அளவீடு செய்ய வேண்டும்: மா.கம்யூ. போராட்டத்தில் 'தள்ளுமுள்ளு'
-
ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தால் 15 நாளில் முழு அனுமதி தர அரசு முடிவு
-
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்