திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கு; மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி
சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம், அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட போது, ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்கு தாவினார். இவர் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுக எம்எல்ஏவான வைத்திலிங்கம், 2011-2016ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆட்சியில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த சூழலில், வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதனை விசாரித்த நீதிபதி, மேல் விசாரணைக்கு அனுமதியளித்ததுடன், 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான அடுத்தகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள இருக்கிறது.
பிரத்யேக வீடியோ!
கோர்ட் போட்ட உத்தரவால் திமுக எம்எல்ஏவுக்கு அதிர்ச்சி; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விருமாண்டி எங்க போன? பதிலுக்கு பதில் லாவனி பாடுவியே வா
சைஸ் பாருங்க
என்னதான் மேல் நீதிமன்றத்துக்கோ அல்லது கீழ்
நீதிமன்றத்துக்கோ விசாரனைக்கு உட்படுத்தினாலும் எந்த நீதிமன்றத்தாலும் எந்த தண்டனையும் கொடுத்துவிட முடியாது அப்படியே கொடுத்தாலும் நம்ம தாழ்வான் ஆ.ராசா அதையும் மீறி நீதிபதியின் மேலேயே சாதி அவமதிப்பு குற்றத்தை சுமத்தி இவனுகளை வெளியே கொண்டாந்துருவாப்ல
நல்லா வாஷ் பண்ணித் தானே முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கத்துக்கு சீட் கொடுத்து ஜெயித்தார். அதற்குள் எப்படி அழுக்கு ஏறிவிட்டது.நல்ல வேளை தமிழ்நாட்டுக்கு நல்லதொரு ஆட்சி கிடைத்துவிட்டது. ஊழல் ஊழல் ஊழல் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் இதுதான் கடந்த ஆட்சிகளில் நடந்தது
கம்முனு அதிமுகவோடவே இருந்து இப்போது தவெகவிற்கு தாவியிருந்தால் உங்களுக்கும் ஜாக் பாட் அடித்திருக்கும்.
எல்லோரும் 60 வயதை கடந்தவர்கள். அனுமதி பெறுவதற்கு பத்து வருடங்கள் விசாரணைக்கு 10 வருடங்கள் அதற்குள் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை முடிந்து விடும். நம்ம நாட்டிற்கு சட்டங்கள் தேவையில்லை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடிங்கள் சுருட்டுங்கள் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.
என்ன அவசரம் ?. இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வர 30 வருடம் ஆகலாம் .
வேலுவும் இவரும் மாசுவும் ஒரே சாயலில்