போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
நமது டில்லி நிருபர்
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது என டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தினர், டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த டில்லியே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.
இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 27) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது. போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே தடியடி நடத்துவது ஏற்க முடியாது'' என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது:
* போலீசாரின் அடக்குமுறையை நியாயப்படுத்த முடியாது. இளைஞர்கள் மீதான தடியடி சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும்.
* போராட்டத்தை போலீசார் கையாள்வது தொடர்பாக தேசிய அளவில் வழிகாட்டுதல்கள் தேவை.
* போலீசார் வரம்பு மீறி பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது.
* மாணவர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உட்பட ஒவ்வொரு தனிநபரின் உயிரும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிரத்யேக வீடியோ!
மாணவர்கள் மீது தாக்குதல்: போலீசுக்கு நீதிபதிகள் கண்டனம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
அய்யா நீதி அரசர்களே, போராட்டம் செய்பவர்களுக்கு காலை உணவு, காபி அல்லது தேநீர், மதிய உணவு ஒரு இனிப்பு வகையுடன், மாலையில் போண்டா அல்லது சமோசா, காபி அல்லது தேநீர், இரவு உணவாக
சப்பாத்தி தால் பின்பு இரவில் உற்சாக பானம் ஆகியவற்றை போலீசார்
கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போடுங்கள். அதை ஒரு உச்ச நீதிபதி மேற்பார்வை இடவேண்டும். தேவை என்றால் போராட்ட காரர்களுக்கு பெண்களையும் ஏற்பாடு செய்யச் சொல்லலாம் அல்லது நீதிபதியே ஏற்பாடு செய்யலாம்.
இது எல்லாமே செய்யும் அளவுக்கு துணிந்து விட்டார்கள் நம் நீதி பாதகர்கள்
SULLAN எந்த பொந்துல ஒளிஞ்சிக்கிட்டு திரியிற பேச்சு மூச்சையே காணோம்
முண்டிக்கிட்டு வந்து கருத்தை போடுவ படவா ராஸ்கோல்
யாரிடம் போராடுகிறார்கள் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.
நீதிபதிகள் வீட்டின் முன்பு இந்த போராட்டக்காரர்கள் போராட வேண்டும்.
நீதிபதிகளின் அமைதியை மக்கள் கண் குளிர பார்க்க வேண்டும்.
காவல்துறை இனிமேல் அவர்களை நீதிமன்றம் முன் கொண்டு சென்று நிறுத்தி இங்கு அமைதியான முறையில் போராடுங்கள் என்று சொல்ல வேண்டும். நாலு நீதிபதிகளை இழுத்துக் கொண்டு வந்து கூட்டத்தின் நடுவே விட்டு விட வேண்டும்.
உண்மையில் இவங்களுக்கு நாமகரணம் செய்த உச்ச நீதிமன்றம் நோக்கி ஓடியிருக்க வேண்டும். பிறகு தெரியும் அமைதி பற்றி
அமைதியாக ஆபாசமாக பேசினார்கள் அமைதியாக பாராளுமன்றத்தை நோக்கி ஓடினார்கள் அமைதியாக பத்திரிகை நிருபர்களை தாங்கினார்கள். உச் நீதி மன்றம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது
ஓ இது தான் அமைதி மார்க்கமா ....
போச்சுடா அமித் ஷா வும் காலி
ஒரு நீதிபதி பதவி, அறிவு மண்டையில் காலி என்று சொல்லக்கூடிய பதவி என்று இப்போது புரிய வைக்கும் வகையில் உளறியதற்கு பாராட்டு