மளிகை கடைகளில் திருடிய சிறுவன் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மளிகை கடைகளில் பணம், பொருட்களை திருடிய வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு விக்னேஷ், 31; மளிகை கடையில் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போனது. அதே போல், அருகேவுள்ள சங்கர், 47; என்பவரின் மளிகைக் கடையில் 600 ரூபாய், சிகரெட் பாக்கெட்டுகளும், முருகன், 48; என்பவரின் முருக்கு கடையில் 2,000 ரூபாயும் ஒரே நாள் இரவில் திருடு போனது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், இந்த மூன்று கடைகளிலும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடியின் செல்பி வீடியோ நீக்கம்; மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்
-
குறிஞ்சி பூக்களை பார்க்க அனுமதி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
டில்லியில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
"விஜய் விஜயம்" செயலி; கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
-
பேச்சுவார்த்தைகளில் பலன் கிடைக்காவிட்டால் ராணுவ நடவடிக்கைக்கு தயார்; ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
Advertisement
Advertisement