அடிதடி வழக்கில் சிறுவன் உட்பட 3 பேருக்கு காப்பு

சேலம்;சேலம் தாதகாபட்டி, அம்பாள் ஏரி ரோடு பகு-தியை சேர்ந்தவர் நித்தீஸ்வரன், 19. கடந்த மாதம் சேலம் மணியனுார் பகுதியில் உள்ள நண்பரான பாலா, 27, மற்றும் பிரவீன், தனுஷ், ஆகியோ-ருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்-போது பாலாவிற்கு ஆதரவாக நித்தீஸ்வரன் இருந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த, 24ல் இரவு நித்தீஸ்வரன் வீட்டின் அருகே இருந்தபோது, 3 பேர் அவரை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு பல் உடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அன்ன-தானபட்டி போலீசில் நித்தீஸ்வரன் கொடுத்த புகார்படி, போலீசார் வழக்கு பதிந்து தாதகாபட்டி தாகூர்தெருவை சேர்ந்த பிரவீன், 19, அதே பகுதியை சேர்ந்த தனுஷ் மற்றும் சிறுவன் உட்பட மூவரை நேற்று கைது செய்தனர்.

Advertisement