ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்; 'அரசு வெளியிட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கும் வகையில் இல்லை' எனக்கூறி, தமிழ்-நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்-தினர், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் இளங்-கோவன் தலைமை வகித்தார்.


மாவட்ட செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வூதியர்கள் ஏற்க-மாட்டோம். ஓய்வூதியர் சங்கங்களை புறக்கணிக்-கக்கூடாது. கட்டாய பிரீமியமாக, 644 ரூபாய் பிடித்தம் செய்யக்கூடாது. வெளிப்படைத்தன்-மையற்ற பேக்கேஜ் திட்டம் ஏமாற்று வேலை.அவசரத்திற்கு பட்டியலில்லாத மருத்துவம-னையில் சிகிச்சை மேற்கொண்டால், 60 சதவீதம் மட்டுமே என்பது மனிதநேயமற்ற செயலாகும்.
கடந்த கால சங்கங்களின் முறையீடுகளை, நீதி-மன்ற ஆலோசனைகளை புறந்தள்ளி அரசாணை என்ற பெயரில் ஓய்வூதியர்களின் உயிரோடு விளையாடும் செயலாகும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement