செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ராமராஜ் தலைமையில், நேற்று டவுன் பஞ்., அலுவலகம் முன், செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த வருவோரிடம், கொடிநாள் நன்கொடையாக, 500 ரூபாய் பெறுவதை நிறுத்த வேண்டும். பழனி நகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் செல்லும் கழிவுநீரை தடுக்க வேண்டும் எனக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 40 பேர் கலந்துகொண்டனர்.

Advertisement