டாஸ்மாக் ஊழல் வழக்கு; செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி

26

சென்னை: டாஸ்மாக் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

மதுபான கொள்முதல், 'டெண்டர்' முறைகேடு, சட்ட விரோதமாக, 'பார்' நடத்தியது, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 30) நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

செந்தில்பாலாஜி தரப்பு

அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், ''முதல் தகவல் அறிக்கையில் செந்தில்பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்த புகாரும் இல்லை; பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கும் செந்தில்பாலாஜிக்கும் தொடர்பில்லை'' என வாதிட்டனர்.

பிறகு போலீசார் தரப்பில், ''ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என்பதால் விரிவான விசாரணை தேவை. புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன்ஜாமின் தரக்கூடாது'' என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தள்ளுபடி

இதையடுத்து, ''எதன் அடிப்படையில் முன் ஜாமின் கோருகிறீர்கள்; காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை உள்ளது'' என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த, முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.



@block_P@

நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்து உள்ளார். நாளை (ஜூலை 31) பட்டியலிட்டு, விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவித்தார்.block_P



தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

செந்தில் பாலாஜி தலையில் பேரிடி; டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் ஐகோர்ட் மறுத்தது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement