பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை மஞ்சள் அபிேஷகம்

புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 108 மஞ்சள் குடம் அபிேஷக விழா நாளை நடக்கிறது.

புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் , பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 மஞ்சள் குடம் அபிேஷக விழா நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாரதனை நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் அருளை பெற கோவில் நிர்வாகிகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement