ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் இறுதிகட்டம்; புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார் டிரம்ப்
வாஷிங்டன்; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு அமெரிக்கா தாக்குதலுக்குத் தயாராக உள்ளது, ஆனால் ஒப்பந்தம் விரைவாக இறுதி செய்யும் தருவாயில் இருப்பதால் தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத வகையில் வலிமையுடன் அமெரிக்க ராணுவம் ஈரானுக்கு எதிராகப் போரிட ஆயத்த நிலையில் உள்ளது. அப்படியிருந்தும், ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரானும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் நம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறப்பதும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலனுக்காகவும், ஈரானுடன், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன். ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பதிலடி கொடுப்போம்!
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்து, அதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை அதிகரித்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
ஈரானை எளிதாக நினைத்துவிட்டார், டிரம்ப். இப்போது தினமும் புலம்புகிறார், பேப்பரில் பேர் வர படாத பாடுபடுகிறார். பாவம் அமெரிக்கா இப்படி ஆகிவிட்டதே
இரு அழிவு சக்திகள்
like parrot he goes on repeating this endlessly
1). பஹல்காம் பதில் அடி தாக்குதல் இந்தியா நடத்திய போது உலக நாடுகளுடன் பேசி கொண்டே இரண்டு நாள் போரை EXTEND பண்ணி PORT OF KARACHI (போர்ட் ஆஃப் கராச்சியை) அடித்து துவைத்து எடுத்து இருக்க வேண்டும்.
2). அப்படி நடந்து இருந்தால் பத்து பதினைந்து வருடங்கள் பாக்கிஸ்தான் எழுந்து இருக்க முடியாது நிலையில் இருந்து இருக்கும். கூடவே பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தொந்தரவு இருந்து இருக்காது.
3). அந்த சமயத்தில் நாம் செய்த தவறை டொனால்ட் டிரம்ப் செய்யவில்லை.
4). ஈரானை அடித்து துவைத்து பிரித்து எடுத்து விட்டார்.
5). இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் ஆகும் ஈரான் மீண்டு வர.
6). தீவிரவாதம் செய்யும் நாடு அல்லது அமைப்பு அல்லது தனிநபர் யாராக இருந்தாலும் அவர்கள் சமூகத்தில் இருந்து களையப்பட வேண்டும்.
கோமாளியாக இருப்பானோ ?
போரை முடிவுக்கு கொண்டுவர திட்டம். ஏன்? குண்டு தீர்ந்து போச்சாம்...
இரண்டு கோமாளிகள் ட்ராமாவால்(கோமாளிதனத்தால்) உலக நாடுகளில் மிக்க பதற்றம்?
இது ஒரு சிறந்த பொழுது போக்கு
Every third day he speaks like this. He has lost his credibility.
அய்யயய, எனக்கு நிறைய வேலை இருக்கு சாமி, ஆளை விடுங்க.