முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏவுக்கு நிபந்தனையுடன் ஜாமின்
சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய, விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதுாறாக பேசியதாக, கடந்த 20ம் தேதி துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரது ஜாமின் மனுவை, துாத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ''கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பின்னரே, தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்' என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
திமுக எம்எல்ஏ ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 03) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
* இனி மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கவும், நாள்தோறும் தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.
* தமிழக சட்டபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் போலீஸ் ஸ்டேஷில் ஆஜராவதில் இருந்து ஐகோர்ட் விலக்கு அளித்துள்ளது.
சிறப்பு வீடியோ!
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஐகோர்ட் ஜாமின்; விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
vijay - Manama,இந்தியா
03 ஆக்,2026 - 13:55 Report Abuse
நமது நாட்டில ஜனாதிபதியை பிரதமரை , முதல்வரை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் . ஒன்றும் நடக்காது . ஆனால் சுப்ரீம் கோர்ட்டு , உயர்நீதி மன்ற நீதிபதிகளை விமர்சித்தால் போதும், உடனே நடவடிக்கை பாயும் . குறைந்தது 6 மாதம் அதிகபக்க்ஷம் 2 வருடம் சிறை தண்டனை உறுதி மற்றும் பெனால்டி போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள் . ஒரு ஹை கோர்ட் நீதிபதி வீட்டில் 10 கோடி ரூபாய் எரிந்தும் எரியாத நிலையில் கண்டு எடுத்தார்கள் . என்ன நடவடிக்கை எடுத்தார்கள் இது வரை. அந்த நீதிபதி அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டார் அவளவுதான். ஒரு போலீஸ் நடவடிக்கை போலும் இதுவரை இல்லை. ஏன் இந்தியாவை பனானா ரிபப்ளிக் என்று வெளி நாட்டவர்கள் பரிகசிக்கீரர்கள் என்று இப்போது விளங்கும். 0
0
Reply
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement