பாரம்பரிய ஊஞ்சலில் உற்சாகம்: ஜல்லிபட்டியில் கொண்டாட்டம்

உடுமலை: ஜல்லிபட்டி பொம்மையன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி ஊஞ்சல் அமைத்து, மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

உடுமலை அருகே ஜல்லிபட்டியில் பொம்மையன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பெருக்கு நாளில், ஊஞ்சல் துாரி அமைத்து சிறப்பு வழிபாடு செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.

அவ்வகையில், நேற்றும் பெரிய மரங்கள் நட்டு, அகல மரப்பலகை அமைத்து, அதற்கு சந்தனம், குங்குமமிட்டு, மாவிலை தோரணத்துடன், மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து ஊஞ்சலுக்கு வழிபாடு செய்தனர்.

பின்னர், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும், ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர். கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement