கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது

கடமலைக்குண்டு, ஆக.6 -

கடமலைக்குண்டு எஸ்.ஐ., தீபக் தலைமையிலான போலீசார் கொம்புக்காரன்புலியூர் சுடுகாடு அருகே நின்றிருந்த இருவரிடம் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு பார்சல்களில் காய்ந்த நிலையில் இலை, பூ, விதையுடன் கூடிய 5.9 கிலோ கஞ்சா இருந்துள்ளது. கஞ்சா வைத்திருந்த மேலப்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா 21, சதீஷ்குமார் 21, ஆகியோரை கைது செய்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிற்கான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement