மற்றொரு பாகிஸ்தானாக மாறுகிறது வங்கதேசம்: ஷேக் ஹசீனா மகன் எச்சரிக்கை

5


புதுடில்லி: '' இந்தியாவின் கிழக்கு எல்லையில் வங்கதேசம் மற்றொரு பாகிஸ்தானாக உருவாகி வருகிறது,'' என ஷேக் ஹசீனாவின் மகன் தெரிவித்துள்ளார்.


வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்வில் அவரது மகன் சஜீத் வஜீப் கூறியதாவது:
2024 நடந்த போராட்டத்தில் உயிரிழப்புகள் குறித்து அடிக்கடி செய்தி வெளியாகின. அதில் பல்வேறு எண்கள் வெளிவந்தன. ஐநா சாலை 1,400 பேர் எனக்கூறியது. ஆனால் வங்கதேச அரசு 800 பேர் எனக்கூறியது. எஞ்சிய 600 பேர் எங்கே
ஐநா சபைக்கு அவாமி லீக் கட்சி கடிதம் எழுதி உள்ளது. வழக்கறிஞர்களும் தொடர்ந்து ஐநாவுக்கு கடிதம் எழுதினர். ஆனால், ஐநாவுக்கு இதுவரை எந்த பெயரும் அளிக்கப்படவில்லை.

முகமது யூனுஸ் ஆட்சியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பாவி மக்கள் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது முன்னர் நடந்திராத விஷயம்.

அவாமி லீக் கட்சியைச் சேரந்த ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்படவில்லை. பலருக்கு 80க்கு மேல் வயதாகிறது. போலீஸ் காவலில் பலர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் கிழக்கு எல்லையில், வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருவது இந்தியாவுக்கு கவலைக்குரிய விஷயம். இன்று இந்திய எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் உருவாகி உள்ளது.


பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகள் வங்கதேசத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement