மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
லாஸ் வேகாஸில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: ராணுவ நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா ஈரானை பலவீனப்படுத்தியுள்ளது. ஆனாலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறது. வெனிசுலாவில் செய்ததையே ஈரானிலும் அமெரிக்கா செய்து வருகிறது.
ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதையே அமெரிக்கா விரும்புகிறது. ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்காது. நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்.
மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை கோரியதை அடுத்து அது நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருந்தோம், அப்போது அவர்கள் என்னை அழைத்து, தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள்.
நாம் பேசலாம் என்றார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் நம்மை மதிக்கிறார்கள். ஈரானுடன் நீண்ட காலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்திருக்க வேண்டியதை வேறு எந்த அதிபரும் செய்யவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அமெரிக்காவைக் குறிப்பிடும் வகையில் சில தரப்பினர் இந்த முயற்சிக்கு தடையாக இருக்காவிட்டால் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.
இரான் மக்களை கொள்ளமாட்டேன், ஆனால் வரிபோட்டு, உலக மக்களை கொல்லுவேன்,
எவன் ஒருவன் (என்னைப் போல் கட்டுக்கடங்காமல் நிறைய படிக்கிறானோ அவனை அவனது மூளை சும்மா இருக்க விடாது) இதற்கு என்னோட அப்பன் ஆத்தாதான் காரணம் அவர்கள் ஏன் ஹிந்தி முதல் ஃபிரஞ்ச் மொழி வரை என்னை படிக்க வைத்து ஆறறிவு ஜீவனாக படைத்தார்கள்? இதோ
ஜனவரி 2026 ல் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா தூக்கும் என்று ... நான் பெட்டிங் கட்டினேன் அதே போல் மதுரோ அரஸ்ட் செய்யப் பட்டார். அதில் எனக்கு கிடைத்த பெட்டிங் தொகை ...டாலர்கள். 2026 ஜனவரி கடைசியில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று நான் பெட் கட்டினேன் அதனாலும் எனக்கு ஒரு கணிசமான வருவாய் கிடைத்தது. அதே போல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று சொல்லும் டிரம்ப் உடனே தாக்குதல் நடத்த மாட்டார் என்று சொல்லி பெட் கட்டினேன். அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று 20% சதவீதம் பேர் பெட் கட்டியவர்களில் நானும் ஒருவன். அடுத்ததாக என்ன நடக்கும் இந்தப் போர் எங்கள் கணிப்பு படி ஏப்ரல் மாத கடைசியில் அதிபர் டிரம்ப் போர் நிறுத்ததை அறிவித்தாலும் ஜூலை கடைசி அல்லது ஆகஸ்டு முதல் வாரம்தான் போர் முடிவுக்கு வரும். இதனால் எனக்கு பெட்டிங் தொகை எவ்வளவு வரும் என்று இனிமேல்தான் தெரியும். கடைசியாக இஸ்ரேல் மட்டும் தனியாக பாகிஸ்தானை தாக்குமா அல்லது இந்தியாவுடன் சேர்ந்தா என்பது எங்கள் அடுத்த பெட்டிங்! பெட்டிங் நடைபெறுகிறது என்றாலே அந்த செய்தியும் நடைமுறைக்கு வருவதுதானே சாத்தியம்!
இன்று உலக மக்கள் அத்தனை பேரின் பிரச்சனைகளுக்கும் ஒரே காரணம் இவரும் இவரை ஆதரித்த அமெரிக்கா மக்களும் தான். அவர்கள் நாட்டு பிரச்சினைகளை உலக பிரச்சினைகளாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.
ஆயிரமாயிரம் பேரை கொன்றபிறகு இந்த "கலியுக புத்தருக்கு" ஞானோதயம் வந்திருக்கு. ஆனால் அந்த சுத்த புத்தர் யாரையும் கொல்லவில்லை. இறந்தவர்களின் உடலை பார்த்து அவருக்கு ஞானோதயம் வந்தது.
JOKER SAATHAN VEDAM OOTHUKIRATHU
உன் கொலைவெறி பசி அடங்காது. அமெரிக்கா ப்ரெசிடெண்ட் எல்லோருக்கும் இந்த வியாதி இருந்தது. உனக்கு அது ரொம்ப அதிகம். உங்க நாட்டுடன் எந்த விதமான தொடர்பு வைத்தாலும், உன் ப்ரம்மஹத்தி பிறரையும் பிடிக்கும்.
அதாவது மக்களை முழுதாக கொல்லும் எண்ணம் இல்லை. உலக நாட்டு மக்களின் மேல் வரிகளை போட்டு அமெரிக்கா மக்களை வாழ வைத்து விடலாம் என்று வாட்டி வதைத்து விடலாம் என்று சொல்கின்றார்
நம்பிட்டோம் ......
jocker
உலக நாடுகளுக்கு டிரம்ப் மட்டுமே அச்சுறுத்தலாக உள்ளார் தினம் ஒரு பேச்சு, பேச்சில் உண்மை மற்றும் உறுதி கிடையாதுமேலும்
-
வேடந்தாங்கலில் கேட்பிஷ் மீன்களின் அழிப்பு
-
பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
-
உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் மெத்தனம்:விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
-
குடும்ப வன்முறை 2 பேருக்கு வலை
-
கிராம அம்மன் கோயில்களில் சேவையாற்றும் அம்மாடிகள்
-
பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா