கல்லால் அடித்து வாலிபர் கொலை

பெல்லந்துார்: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரோஜித் மல்லிக், 18. பெங்களூரில் உணவு விற்பனை நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்தார்.

பெல்லந்துார் ஏரி அருகே கூடாரம் அமைத்து, அங்கு தங்கியிருந்தார். நேற்று காலை ஏரிக்கரையில் ரத்த வெள்ளத்தில் அக்ரோஜித் இறந்து கிடந்தார். அங்கு நடைபயிற்சி சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அக்ரோஜித்தை யாரோ மர்மநபர்கள் தலையில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது.

Advertisement