சவடு மண் அள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி கோட்டாட்சியர் கைது; முகாம் அலுவலகத்தில் ரூ.5.52 லட்சம் பறிமுதல்
நமது நிருபர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சவடு மண் அள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), சரவணப்பெருமாள் 52, உடந்தையாக இருந்த டிரைவர் சுந்தர் 41, ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோட்டாட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.5.52 லட்சத்தையும் கைப்பற்றினர்.
பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கண்மாய்களில் சவடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) சரவணபெருமாள், குறிப்பிட்ட கண்மாயில் சவடுமண் அள்ள அனுமதி கேட்ட ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை அந்த நபர் கொண்டு சென்றார். நேற்று விடுமுறை என்பதால் ஓட்டப்பாலம் அருகில் உள்ள ஆர்.டி.ஓ., முகாம் அலுவலகத்திற்கு வருமாறு ஆர்.டி.ஓ., அந்த நபரிடம் கூறியுள்ளார்.
டிரைவரும் கைது
அதன்படி அங்கு சென்ற அந்த நபரிடமிருந்து ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் ரூ.50 ஆயிரம் பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆர்.டி.ஓ., லஞ்சம் பெற அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் சுந்தரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து போலீசார் முகாம் அலுவலகத்தை சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூ.5.52 லட்சம், முக்கிய பல ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் ஆர்.டி.ஓ.,வின் மதுரையில் உள்ள வீட்டிலும், டிரைவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து இருவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். கோட்டாட்சியரே லஞ்சம் பெற்று கைதானது வருவாய்த்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருமை அருமை நிறைய படித்தவர்கள் நிறைய கொள்ளை அடிக்கிறார்கள் இப்படிப்பட்ட கொள்ளையர்களை திருடர்களை தேசத்துரோகிகளை உருவாக்குவதற்காக கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய கல்வித்துறை மிக அருமையாக வேலை செய்கிறது நாட்டு மக்கள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து அனைவரையும் இப்படி திருடர்களாக ஆக்க கல்வித்துறைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் நீங்களும் திருந்தாதிர்கள் யாரையும் திருந்தி நல்லவனாக வாழவும் விடாதீர்கள் அதுதான் நீங்கள் மக்களிடம் சம்பளம் வாங்குவதற்கு சரியான நன்றி கடன்
பரமக்குடி கரப்பான் பூச்சியை மருந்தடிச்சு கொல்லவேண்டும் ... சரியான தண்டனைகள் கொடுக்காவிட்டால் இது போன்ற தீமைகள் தொடரும் ..
முதலமைச்சர், அமைச்சர், MLA மற்றும் கவுன்சிலர்ஸ் parcentage மாறுது அவ்ளோதான். அ.தி.மு.க. மற்றும் TVK ஒண்ணுதானே, அதான் ஆதவ் சொல்லிட்டானே. அ.தி.மு.க. எப்படி மாட்டிக்காம லஞ்சம் வாங்குகிறது என்பதை தெரிஞ்சிக்கத்தான் அ.தி.மு.க. நிர்வாகிகளை TVK சேர்த்துக்கிட்டு இருக்கு.
Why ULIYIN OOSAI, instead, they can be asked to see the movies acted by Mr Stalin Ore Rattham, after witnessing the movie, for those corrupt officials it would be more deterrent than his father"s movies.
குளம் குட்டை ஏரியில் மண் அள்ளும் வர்கள், குவாரி தொழில் செய்பவர்கள் மகா யோக்கியன் அவர்களிடம் லஞ்சம் கேட்கலாமா ? அனுமதி கொடுத்த இடத்தில் வெட்டாமல் வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக சுரண்டி எடுப்பது தான் இவர்கள் வேலை, வாரம் ஒருமுறை உயிர் பலி நிச்சயம் தினம் தினம் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு வரும் தொழிலாளர்களிடம் கேட்டால் இவர்களின் உண்மை முகம் தெரியும்.. .... வில்லன் படத்தை போடும் நீங்கள் கதாநாயகனை எப்போது காட்டுவீர்கள்?
இலஞ்சம் வாங்குவோருக்கு கடும் தண்டனை ஏதும் கொடுக்காமல், இடமாற்றம் 90 நாட்களுக்கு இடைப்பணி நீக்கம் போன்ற மயிலிறகு தடவல் தண்டனைகளைப்பார்க்கும்போது ஜாக்கட்டோ ஜய்யோ அமைப்பு இந்த ஆட்சியிலும் மிகுந்த செல்வாக்குடன் இருப்பது போலவே தெரிகிறது
இனிமேல் லஞ்சம் வாங்குபவர்களை ஒரு ரூமில் அடைத்து வைத்து கட்டுமரத்தின் உளியின் ஓசை படத்தை ஐம்பது நாட்கள் தொடர்ந்து பார்க்கவிடவேண்டும். பிறகு ஒரு பயலும் லஞ்சம் வாங்கமாட்டான்.
லஞ்ச ஒழிப்புத்துறை தினமும் ஒரு பத்து பேரையாவது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஊழலில் லஞ்சத்தில் திளைக்கும் தனி அவர்கள் முகத்தில் தெரியும். நீங்களும் ஒருமுறை போட்டோவை பாருங்களேன்.