மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் நிறைவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், தேர்ப்பேட்டை பகுதி பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காக மூன்று நாள் மகா நவ-சண்டியாகம் கடந்த, 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி-யது.
அன்று மாலை, 4:30 மணிக்கு, தேர்ப்பேட்டை பச்சைகுளத்-திலிருந்து நீர் குடம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு முதற்கால நவசண்டியாகம், இரவு, 7:00 மணிக்கு இரண்டாம் கால மகா நவசண்டியாகம் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு மூன்றாம் கால மகா நவசண்டியாகம் நடந்தது.மதியம், 1:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, நவசண்டியாக விளக்கவுரை, மதியம், 2:00 மணிக்கு கோவிலை சுற்றி கலசம் புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஓசூர், காங்., - முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ், கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
'கோபர்தன்' திட்டத்தால் எரிவாயு இறக்குமதி செலவு குறையும்: இந்திய பயோகாஸ் சங்கம் தகவல்
-
பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு; உற்பத்தியாளர்கள் கவலை
-
பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பா மீண்டும் முதலிடம்
-
வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் சோதனை மையங்கள் விரிவுபடுத்த பி.ஐ.எஸ்., திட்டம்
-
மது உ ற்பத்தியில் தவறான தகவல்; டியாஜியோவுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எச்சரிக்கை
-
எண்கள் சொல்லும் செய்தி: