சென்டர் மீடியன் இல்லாத ராயக்கோட்டை சாலை தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள அமேரியா பெட்ரோல் பங்க் முன் துவங்கி, அசோக் பில்லர் சர்க்கிள் வரை, 1.5 கி.மீ., துாரத்திற்கு, ராயக்கோட்டை சாலையில் தினமும் கடும் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலையில் ராகவேந்திரா கோவில் முன் மட்டும், சென்டர் மீடியன் உள்ளது. மற்ற இடங்களில் சென்டர் மீடியன் அமைக்காமல் உள்ளனர். ராயக்கோட்டை வழி-யாக தர்மபுரி செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், பஸ்கள் போன்றவை இச்சாலையை தான் பயன்படுத்துகின்றன.
தினமும், 50 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தும் இச்சாலையில், அமேரியா பெட்ரோல் பங்க் முதல், அசோக் பில்லர் சர்க்கிள் வரை, சென்டர் மீடியன் அமைக்காததால், வாக-னங்கள் ஒன்றை ஒன்று முந்தி தாறுமாறாக செல்கின்றன. சாலையை குறுக்காக நிறுத்தி, பல வாகனங்களை திருப்புகின்-றனர். அதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து அச்சம் நிலவுகிறது.போலீசாராலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடிய-வில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்தை நெரி-சலை பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. சாலை-யோரம் வாகனங்களை நிறுத்துவதால், சாலையின் அளவு குறைந்-துள்ளது. சென்டர் மீடியன் அமைத்தால், சாலையோரம் வாக-னங்கள் நிறுத்துவதை கட்டுப்படுத்த முடியும். அதனால், மாநில நெடுஞ்சாலைத்துறை, சென்டர் மீடியன் அமைக்க முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
'கோபர்தன்' திட்டத்தால் எரிவாயு இறக்குமதி செலவு குறையும்: இந்திய பயோகாஸ் சங்கம் தகவல்
-
பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு; உற்பத்தியாளர்கள் கவலை
-
பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பா மீண்டும் முதலிடம்
-
வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் சோதனை மையங்கள் விரிவுபடுத்த பி.ஐ.எஸ்., திட்டம்
-
மது உ ற்பத்தியில் தவறான தகவல்; டியாஜியோவுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எச்சரிக்கை
-
எண்கள் சொல்லும் செய்தி: