குடிக்க பணம் கேட்டு நண்பர் மீது தாக்குதல்

விழுப்புரம்:  வளவனுார் அருகே குடிப்பதற்கு பணம் கேட்டு நண்பரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வி.அரியலுாரை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் ரஞ்சித்குமார், 32; இவர், தனது நண்பரான சசிக்குமாருடன், 25; நேற்று முன்தினம் இரவு, பைக்கில் புதுச்சேரி மாநிலம் மடுகரைக்குச் சென்று, மது அருந்திவிட்டு, பைக்கில் திரும்பி வந்தார்.

அப்போது, வளவனுார் அடுத்த சிறுவந்தாடு பகுதியில் வந்தபோது, ரஞ்சித்குமாரின் நண்பரான விழுப்புரம் அடுத்த சாலாமேடை சேர்ந்த பழனி மகன் கருணா, 32; என்பவர், மது போதையில் வழிமறித்து, குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார்.

பணம் தராததால், ஆத்திரமடை ந்த கருணா, ரஞ்சித்குமாரை திட்டி, தாக்கினார். காயமடைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வளவனுார் போலீசார், கருணா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement