சிவசங்கமம் ஆன்மீக குழு மரங்கன்றுகள் நடவு    

சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் சிவசங்கமம் ஆன்மீக  நண்பர்குழு சார்பில் எதிர்காலங்களில் இயற்கை வளங்கள் பெருக ‘மரங்கள் பேசிடுமே’ திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்க, ஆன்மிக சங்கமம் குழு நிர்வாகி ஹரிதாஸ் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.

நிர்வாகிகள் வேணுகோபால், ராமலிங்கம், வைத்தியநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் இயற்கை வளங்கள் பெருகவும், எதிர்காலங்களில் வாழும் சந்ததியினர் நலமுடன் நல் மூச்சு காற்று, மழை பெருகவும், மா, தேக்கு, மகாகனி, வேம்பு, புங்கம் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Advertisement