த.வெ.க., - எம்.எல்.ஏ., மனைவி சாலை விபத்தில் படுகாயம்
ஓசூர்: ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணனின் மனைவி உமாவதி, 26, கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன். இவரது மனைவி உமாவதி, கர்நாடக மாநிலம், தும்கூரில் உள்ள தனியார் சட்டக்கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறார். தன் தம்பி பொன்ராஜ், 24, மற்றும் இரு பெண்கள், ஒரு குழந்தையுடன், 'சுசூகி ஸ்விப்ட்' காரில், கிருஷ்ணகிரி நோக்கி நேற்று சென்றார்.
அதிகாலை, 3:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளியில் சென்ற போது, முன்னால் சென்ற பிக்கப் வாகன டிரைவர், வேகத்தடை இருந்ததால் திடீரென வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.
இதில், உமாவதி சென்ற கார், பிக்கப் வாகனம் பின்னால் மோதியதில், காரின் முன் இருக்கையில் இருந்த உமாவதி படுகாயமடைந்தார். பொன்ராஜ் மற்றும் உடன் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். உமாவதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நெடுஞ்சாலைகளில் வேகத்தை 120 என்று வைக்காமல், 80 என்று வைக்க வேண்டும். வேகத் தடைகள் இருந்தால், 250 மீட்டருக்கு முன்பே, பலகை மூலமாக தெரிவிக்க வேண்டும். வாகனங்கள் வேகமாக செல்லும்போது 10 மீட்டர் இடைவெளி வேண்டும்.மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––
-
இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்; சென்னை விமான நிலையத்தில் திக்...திக்...!
-
மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதப்படுத்தக் கூடாது; மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
-
இன்று இரவு முழு சூரிய கிரகணம்!
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு; தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு!
-
ஏராளமான அச்சுறுத்தல்; ரகசிய பயணத்தை ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்