மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் செயின் பறிப்பு

குளித்தலை:குளித்தலை அடுத்த பணிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், 65. இவரது அக்கா ராஜம்மாள், 75. இவர் கடந்த, 8ம் தேதி இரவு 10:30 மணியளவில் வீட்டுக்கு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரிந்த பெயர் விலாசம் தெரியாத ஒருவர், அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement