இறந்த சிறுவனின் உறவினர்கள் தர்ணா

தேனி, ஆக.13–பெரியகுளம் சருத்துப்பட்டி நிவாஸ்குமார் 14, மாவட்ட அரசு மருத்துவமனையில் சளித்தொல்லை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜூன் 3ல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மயக்க மருந்து கொடுத்த போது சுயநினைவை இழந்தார்.மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். சிறுவனின் தாயார் சுதா உறவினர்கள், சில அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement