2 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த ரூ.24 ஆயிரம்; மூதாட்டியிடம் திருப்பி ஒப்படைத்த கண்டக்டருக்கு பாராட்டு
மும்பை: 2 ஆண்டுகளுக்கு முன் பஸ்சில் தொலைந்த 24 ஆயிரம் ரூபாய் பணத்தை, அதே பஸ்சில் மூதாட்டி பயணம் செய்தபோது அடையாளம் கண்டு கண்டக்டர் ராஜூ அவரிடம் திருப்பி ஒப்படைத்த சம்பவம் பலரது பாராட்டை பெற்றது.
மஹாராஷ்டிரா, வாஷிம் நகர பஸ் கண்டக்டர் ராஜூ வானி. இவரது பஸ்சில், கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 75 வயதான மூதாட்டி உடல்நலம் குன்றிய தன் கணவருடன் பயணம் செய்துள்ளார். நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்கள் வீடு வந்ததும் இறங்கிவிட்டனர்.
பயணிகள் அனைவரும் இறங்கியதும், டிரைவர் பணிமனைக்கு பஸ்-ஐ ஓட்டிச் சென்றனர். அப்போது, பயணிகள் மறந்து உடைமைகள் எதையும் விட்டு சென்று இருக்கின்றனரா என இருக்கைகளை வழக்கம்போல் கண்டக்டர் ராஜூ சோதித்து இருக்கிறார்.
அப்போதுதான் அவர், இருக்கைகளில் ஒன்றில் ஒரு சிறிய பையைக் கண்டார். உள்ளே 24,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளும், கசாபாய் கெய்க்வாட் என்ற பெயர் கொண்ட ஒரு டாக்டர் சீட்டும் இருந்தன. அதன் உரிமையாளர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் ராஜூ பஸ் நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தார்.
அவர் விசாரணை மையத்திலும் தகவல் தெரிவித்து, பணத்தைத் தேடும் எவரையும் தன்னிடம் அனுப்புமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் யாரும் வரவில்லை. நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறின. இறுதியில், ஒரு வருடத்திற்கும் மேலாகியும் யாரும் பணத்தைக் கோரவில்லை.
கண்டக்டர் ராஜூ டாக்டர் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொள்ளவும் முயன்று இருக்கிறார், எந்த முயற்சியிலும் பலன் கிடைக்கவில்லை. தற்போது 2 ஆண்டு கழித்து கண்டக்டர் ராஜூ , ஒரு வயதான மூதாட்டி ஏறி மாலேகானுக்கு பயணச்சீட்டு கேட்டார்.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பஸ் பயணம் இலவசம் என்பதால், ராஜூ அவரது வயதைச் சரிபார்க்க ஆதார் அட்டையைக் காட்டும்படி கேட்டார். அந்த அடையாள அட்டையில் இருந்த பெயரும், டாக்டர் சீட்டில் குறிப்பிடப்பட்டு இருந்த பெயரும் ஒன்று என்பதை கண்டக்டர் ராஜூ கண்டறிந்தார். அவர் உடனடியாக மூதாட்டியை பஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
சரிபார்ப்பிற்குப் பிறகு, பணம் மூதாட்டியிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி கண்டக்டருக்கு நன்றி தெரிவித்தார். நேர்மையை பாராட்டி 1,100 ரூபாயை பரிசாக மூதாட்டி கொடுத்தார். 2 ஆண்டுகள் ஆகியும், நேர்மையான முறையில் கண்டக்டர் ராஜூ பணத்தை திருப்பி ஒப்படைத்த சம்பவத்தை, பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இப்படி சிலர். திமுக போல் மலை அளவுக்கு ஊழல் செய்வோர் பலர் .
நடத்துனரது நன்னடத்தை மற்றும் முன்மாதிரி கள்ளத்தனம் கபடு அபகரித்தல் போன்ற தீதான பழக்கமின்மை இருப்பதால் ராஜுவின் சந்ததி ராஜரீகமாக தழைத்தோங்கும் நீதியின் தேவனாலே
நடத்துனரது நன்னடத்தை மற்றும் முன்மாதிரி கள்ளத்தனம் கபடு அபகரித்தல் போன்ற தீதான பழக்கமின்மை இருப்பதால் ராஜுவின் சந்ததி ராஜரீகமாக தழைத்தோங்கும் நீதியின் தேவனாலே
அருமை பாராட்டுகள் .நேர்மைக்கு ஒரு வணக்கம்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை" நேர்மை, நாணயம், மனித நேயம் இன்னமும் நமது தேசத்தில் உயிர்ப்புடன் உள்ளது. நடத்துனர் ராஜு மற்றும் அவரது குதுன்பத்தார் அனைவரும் நீண்ட நெடுநாள் நலமோடு வாழ இறைவன் அருள்புரியட்டும்.
மனிதம் சாகவில்லை, நேர்மையாளர்கள் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்வதில்லை அவர்கள் கடமையை மட்டுமே செய்கிறார்கள் விளம்பரம் தேடுவதில்லை,
நடத்துநர் ராஜூ வாழ்க வளமுடன் நலமுடன்!