விசிக மாநாட்டுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

9


சென்னை: விசிக மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாநாடு இன்று நடை பெறுகிறது. மாநாடு மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை திருமாவளவன் உரையாற்றுகிறார்.

பிறகு மாநாடு நிறைவு பெறுகிறது. இதனால் உளூந்தூர்பேட்டையில் விசிகவின் மாநாடு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர்களின் நலன், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜா அறிவித்துள்ளார்.

தற்போது மாணவர்கள் நலன் முக்கியம் எனக் கருதிவிடுமுறை அறிவித்தால், இது போல கட்சி மாநாடுகளை வார நாட்களில் நடத்த போலீஸ் அனுமதித்தது ஏன்? விடுமுறை நாட்களில் நடத்தலாமே; மாணவர்களின் படிப்பை கெடுத்து மாநாடு அவசியமா என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


சிறப்பு வீடியோ!

கட்சி மாநாடுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; பெற்றோர் அதிருப்தி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement