பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி

13

புதுடில்லி: பாஜவில் அமைப்பு ரீதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணைத்தலைவர்கள், அமைப்பு பொதுச்செயலாளர், தேசிய பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சில மாதங்களுக்கு முன்னர் நிதின் நபின் பாஜ தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அக்கட்சிக்கு புது நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணைத்தலைவர்களாக 13 பேரும், தேசிய பொதுச்செயலாளர்களாக 8 பேரும், தேசிய செயலாளர்களாக16 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களில் ஆறு பேர் துணைத்தலைவர் ஆகவும், நான்கு பேர் செயலாளர்களாகவும், ஒருவர் பொது செயலாளர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முஸ்லிம்கள் இரண்டு பேருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களின் விவரம் வருமாறு:


துணைத் தலைவர்கள்





வசுந்தர ராஜே சந்தியா (ராஜஸ்தான்)

திரத் சிங் ராவத் ( உத்தராகாண்ட்)

ராம் மாதவ்( டில்லி)

பைஜெயந்த் ஜெய் பாண்டா( ஒடிசா)

புரந்தேஸ்வரி( ஆந்திரா)

ரேகா வர்மா( உபி)

வர்ஷாபென் நரேந்திரபாய் தோசாய்( குஜராத்)

பார்தி பிரவின் பவார்( மஹாராஷ்டிரா)

சர்தர் மன்பிரீத் சிங் பாதல்( பஞ்சாப்)

லால் சிங் ஆர்யா( மபி)

நாகராஜா(கர்நாடகா)

தாரிக் மன்சூர்( உபி)

மதுசந்திரா கர்( மேற்கு வங்கம்)



தேசிய அமைப்பு பொதுச் செயலாளர்





பி.எல் சந்தோஷ்( டில்லி)



தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர்கள்





சிவப்பிரகாஷ்( மும்பை)

சவுதன் சிங்( சண்டிகர்)



தேசிய பொதுச்செயலாளர்





வினோத் தாவ்தே( மஹாராஷ்டிரா)

சுனில் பன்சால்( டில்லி)

பிப்லப் குமார் தேப்( திரிபுரா)

ஸ்மிருதி இரானி( உபி)

சந்தோஷ் பூனியா( ராஜஸ்தான்)

கஜேந்திர படேல்( மபி)

ஹரிஸ் திவேதி( உபி)

சஞ்சய் பாட்டியா( ஹரியானா)



தேசிய செயலாளர்கள்





கவிதா பட்டிதர்( மபி)

சுரேந்திரன்( கேரளம்)

போலா சிங்( உபி)

பிரதீப் வர்மா( ஜார்க்கண்ட்)

ஜக்தீஷ் ஐஸ்வர்பாய் படேல்( குஜராத்)

சந்தீப் பதக்( டில்லி)

பங்னோன் கோன்யாக் ( நாகாலாந்து)

சங்கீதா யாதவ்( உபி)

அனில்அந்தோணி( கேரளம்)

வெங்கடேசன்( தமிழகம்)

மனோஜ் திக்கா( மேற்கு வங்கம்)

சித்தார்த் ஷம்பு( பீஹார்)

ஸ்வதேஷ் சிங்( டில்லி)

மரிகாங்கோ தியோ பர்மன்( அசாம்)

ரோகன் குப்தா( குஜராத்)

ஜெய்பிரகாஷ்( டில்லி)



தேசிய பொருளாளர்





பியூஷ் கோயல்(மஹாராஷ்டிரா)


தேசிய இணை பொருளாளர்





ராஜேஷ்ம மங்கல்( ராஜஸ்தான்)

தேசிய அலுவலக பொறுப்பாளர்

தருண் சுக்( பஞ்சாப்)

தேசிய அலுவலக செயலாளர்: மகேந்திர பாண்டே

வட கிழக்கு ஒருங்கிணைப்பாளர்: சம்பித் பத்ரா( ஒடிசா)

வடகிழக்கு இணை ஒருங்கிணைப்பாளர்: ராஜிவ் பாபர்( டில்லி)

அனைத்து அணிகளின் ஒருங்கிணைப்பாளர்: விஷ்ணு தத் சர்மா( மபி)

அனைத்து அணிகளின் இணை ஒருங்கிணைப்பாளர்கள்


ரிதுராஜ் சின்ஹா( பீஹார்)

விஷ்ணுவர்தன் ரெட்டி( ஆந்திரா)


இளைஞர் அணி தலைவர்- ஹேமங் ஜோஷி (குஜராத்)

மகளிர் அணி தலைவி-ரூப் குமாரி சவுத்ரி( சத்தீஸ்கர்)

ஓபிசி அணி தலைவர்-அமர்பால் மவுரியா( உபி)

விவசாயிகள் அணி தலைவர்- பன்சிலார் குர்ஜார்( மபி)

எஸ்சி அணி தலைவர்- ஷிவேஷ் குமார் ராம்( பீஹார்)

எஸ்டி அணி தலைவர்- மன்னாலால் ராவத்( ராஜஸ்தான்)

சிறுபான்மையினர் அணி தலைவர்- குன்வர் பஷீத் அலி( உபி)



மீடியா கன்வீனர்





அனில் பவுலானி( உத்தரகாண்ட்)



மீடியா துணை கன்வீனர்கள்





ஆஷிஷ் உஷா அகர்வால் ( மபி)

பிரதீப் பந்தாரி( டில்லி)

சித்தார்த் யாதவ்( டில்லி)



சமூக ஊடக கன்வீனர்





தீபக் மாஷ்கே- சத்தீஸ்கர்



சமூக ஊடக துணை கன்வீனர்கள்





பிரீதி காந்தி( மஹாராஷ்டிரா)

ஷிவானந்த் திவேதி ( டில்லி)

அலோக் பட்டி( உத்தரகாண்ட்)

அருண் யாதவ்( ஹரியானா)


பாஜ தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் இருந்தார். இப்போது அவருக்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூப் குமாரி சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து



பாஜ புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
பாஜவின் புதிய நிர்வாகிகளுக்கும், புதிதாக பொறுப்பு அளிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக நியமனம் செய்யப்பட்ட குழுவினர், அமைப்பு ரீதியில் உள்ள அனுபவம், உற்சாகம் மற்றும் அடிமட்ட தொடர்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும். கட்சியை பலப்படுத்துவதிலும் பொது மக்கள் சேவையிலும் அவர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் னெ்ற நம்பிக்கை உள்ளது.அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement