பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை 

சிதம்பரம், ஆக. 18–சிதம்பரத்தில் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மேல்புவனகிரியை சேர்ந்தவர் சிவா, 44; இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால், சிவா மன உளைச்சலில் இருந்தவர் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், சிதம்பரத்தில் உள்ள டைலர் கடைக்கு நேற்று காலை சிவா வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். மதியம் திடீரென சிதம்பரம் புறவழிச்சாலைக்கு சென்ற அவர் அங்குள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

Advertisement