தலைமை செயலகத்தில் முதல்வர் அறை மாற்றம் ஏன்; சட்டசபையில் திமுக, தவெக காரசார விவாதம்

9

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் அறை இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக, சட்டசபையில் இன்று திமுக மற்றும் தவெக இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

அதன் விபரம் பின்வருமாறு:

திமுக எம்எல்ஏ எவ வேலு: முதல்வர் விஜயின் புதிய அறையின் பணிகள் முடிந்தபிறகு, ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது; முதல்வர் அறை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

அமைச்சர் ஆதவ்: வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி மக்களுக்கு கொடுப்பது போல் எ.வ.வேலு பேச்சு உள்ளது; கடந்த 5 ஆண்டுகால பத்திரிக்கை செய்தியை எடுத்துக் காட்டினால் நிலை என்ன? பத்திரிகைச் செய்தி தவறானது, டெண்டர் இன்னும் முடியவில்லை.

முதல்வர் விஜய் தனது வசதிக்காக இல்லாமல், தன்னை சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு ஒரு நல்ல வசதியான இடம் வேண்டும் என்பதற்காக தான் தன்னுடைய அலுவலகத்தை மாற்றுகிறார். இது ஒரு தற்காலிக இடமாற்றம். முதல்வர் விஜயின் தனி செயலாளர்கள் வெறும் 100 சதுர அடி கூட இல்லாத குறைந்த அளவிலான இடத்தில் பணி புரிகின்றனர்.

சரியான கழிப்பறை வசதி கூட இல்லை. நீங்கள் வந்து பார்க்கலாம். புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கருணாநிதியும், ஜெயலலிதாவும் நினைத்தார்கள்; காலையில் இருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டு பிரதிநிதிகளையும் முதல்வர் விஜய் சந்தித்து வருகிறார்.

அனைவரையும் சந்திக்க வேண்டும் என்பதால் அறையை மாற்றுகிறார்கள். பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு பிரசார வாகனத்திலேயே இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்வரை பற்றி தவறான தகவலை அவையில் தெரிவிக்க வேண்டாம்.


வெள்ளை அறிக்கை




கூடிய விரைவில் நெடுஞ்சாலைத்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்; கடந்த 60 நாட்களில் 20 திட்டங்களுக்கு மேல் மீண்டும் புதிய டெண்டர் அறிவித்தோம்; கடந்த ஆட்சியை விட 20லிருந்து 36% வரை மதிப்பு குறைவாக டெண்டர்கள் வெளியாகி வருகின்றன இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

முதல்வர் அறை டெண்டரில் முறைகேடா? திமுக கேள்விக்கு அமைச்சர் ஆதவ் ஆவேச பதில்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement