நிர்வாக செலவுகள் அதிகரிப்பு எதிரொலி; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கும் ஹிமாச்சல்
சிம்லா: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ஆகிய அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க ஹிமாச்சல பிரதேச அரசு திட்டமிட்டு உள்ளது.
நிர்வாக ரீதியான செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறி உள்ளதாவது;
மாநிலத்தில் தற்போது 153 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் பலர் நிபுணத்துவம் பெற்றவர்கள். இருப்பினும் அவர்களை முழுமையாக பயன்படுத்த முடியாதபடி சிறிய துறைகளில் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். எனவே ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கையை 153ல் இருந்து 130 ஆக குறைக்க அரசு முயற்சித்து வருகிறது.
மாநிலத்தில் தேவைப்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளை விட அதிகம் பேர் இருக்கின்றனர். ஐபிஎஸ் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம். ஐஎப்எஸ் பணியாளர் எண்ணிக்கையானது ஏற்கனவே இருந்த 117ல் இருந்து 83 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. பணியாளர் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அரசின் வருவாய் செலவில் ரூ.150 கோடி வரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
ஐஏஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை 100 முதல 110 வரை இருக்க வேண்டும். 23 அதிகாரிகளை மட்டுமே குறைக்க கோருகிறோம். அரசின் திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை செயல்படுத்தும் அதிகாரிகளே எங்களுக்கு அவசியம். அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற விரும்புவதை எங்கள் அரசு அனுமதிக்கும். அவர்கள் உடனடியாக பதவி விலகவும் அனுமதி அளிக்கப்படும்.
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல சலுகைகள் உள்பட ஒவ்வொரு அதிகாரிக்கும் செலவிடப்படும் தொகை ரூ.50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மற்றும் மாநில குடிமை பணி வரைவை புனரமைக்கணும்,ஆங்கிலேயர் காலத்தின் அமைப்பு,இதில் தேர்ச்சி பெற்று சிறு வயதிலேயே உச்ச பட்ச அதிகாரத்தை பெறும் போது சக ஊழியர்களையும் மக்களையும் அடிமைகளை போல் நடத்துவதை நிறைய பார்க்கிறோம்,இந்த குடிமைப்பணி அமைப்பை சுற்றித்தான் அரசு நிர்வாகம் செயல்படுகிறது,இதை நம் நாட்டின் ஜனநாயக தேவைக்கேற்ப புனரமைக்கணும்
பெரும்பான்மை ஐ. ஏ. எஸ் கள் வெட்டி ஆப்பீசர்ஸ். தூக்கிறலாம் .
ஐ ஏ எஸ் - ஐ பி எஸ் தேவையே இல்லை. நான் பணி ஆற்றிய ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என் வேலையோ மாடு மேய்ப்பது தான் என்று. அதாவது அவர் கீழ் உள்ள பணியாளர்கள் எல்லாம் மாடுகளாம். மாநிலத்திற்கு இலவசமும், இவர்களும் தேவையே இல்லை.
வேலைவாய்ப்பு அளிக்கிறேன் எனக் கூறி வென்றுவிட்டு இருக்கும் ஆட்களையும் குறைப்பது சூப்பர். வீண் இலவசங்கள் அழிவின் துவக்கம்.
இறந்த சடலத்தை சுமந்து செல்லும்போது கனம் அதிகமா இருப்பதாக உணர்ந்து சவரம் பண்ணினா எடை குறையுமே என்று முடிவெடுத்தார்களாம்
காங்கிரஸ் கட்சியின் தவறான முடிவு. கவர்னர் பின், ஒரு உத்தரவு முழுமை பெற இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் கட்டாயம். மாநில அமைச்சர், சிவில் நீதிபதி பரிந்துரை செய்யலாம். எதிலும் அரசாணை பிறப்பிக்க முடியாது. ஒரு முதல்வர் போதும். ஒரு நீதிபதி போதும். அதனை முதலில் குறைக்கவும். நிர்வாக சிதைவை உண்டாக்கும் காங்கிரஸ்.
இந்த காங்கிரஸ் அரசு சகட்டு மேனிக்கு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது . விளைவு கஜானா காலி. 300 உநிட் இலவச மின்சாரம். பெண்களுக்கு மாதம் ரூபாய் 1500. ஒரு லட்சம் அரசு வேலை முக்கியமான அறிவிலித்தனமான வாக்குறுதி பழைய பென்ஷன் கொண்டுவரப்பட்டது. இது கஜானாவைக் காலியாக்கியது . வரவு 40000 கோடி செலவு 50000 கோடி . வரவில் 20 % பென்ஷனுக்குப் போய்விடுகிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை
வெரி correct.