தமிழகத்தில் 10 நகரங்களில் சதம் அடித்தது வெயில்

சென்னை: தமிழகத்தில் நேற்று, 10 ஊர்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அளவு பதிவானது.

தமிழகத்தில் நேற்று, திருச்சியில் அதிகபட்சமாக, 104.18 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

அதைத்தொடர்ந்து, வேலுார், நாமக்கல், பாளையங்கோட்டை, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருத்தணி ஆகிய ஊர்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்குமேல் பதிவானது.

Advertisement