தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேர் பலியான சோகம்
பாங்குய்: மத்திய ஆப்ரிக்க குடியரசில் தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்த விபத்தில், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள நனா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள ஹப்பா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு, உள்ளூர் மக்களின் உதவியுடன், 30 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், இதுபோன்ற சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
-
மஹிந்திரா 'பிளாசோ ஐ ட்ரக்' நாட்டின் முதல் ஏ.ஐ., டிரக், 28 முதல் 55 டன் வரை
Advertisement
Advertisement