முதலைப்பட்டி தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன், நேற்று முதலைப்பட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறையின் அரசு பண்ணையில், விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்களின் நாற்றுகளை பார்வையிட்டார்.

மேலும், நாற்றுகள் பராமரிப்பு, மண்புழு உரம் உற்பத்தி, மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தரமான நடவு பொருட்கள் உற்பத்தி செய்து வழங்கும் பணிகள் குறித்து கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். இதில், கரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தியாகராஜன், உதவி இயக்குனர் தமிழ்செல்வி, பண்ணை மேலாளர் பிரேமா, உதவி அலுவலர்கள் மோகன்காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement