அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு

42

சென்னை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். ஒரு உதவியாளர் நியமித்து கொள்ளலாம் என சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது:

* அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.

* வாகனத்திற்கு டிரைவர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியாக வழங்கப்படும்.

* அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000/-உதவியாளர் படியாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஜோதிமணி சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தற்போது முதல்வர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.


பல்வேறு முக்கிய அறிவிப்புகள்!

சட்டசபையில் விதி 110ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த அறிவிப்புகள் பின்வருமாறு:

* ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும்; இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு 30 கோடி ரூபாயும், ஒரு ஆண்டிற்கு 360 கோடி ரூபாயும் செலவாகும். 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் பயன் பெறுவார்கள்.

* சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பில் 400 படுக்கைகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும்; முதல்வரின் மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.

* திருநங்கைகளுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பிரிவும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையமும் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.



@block_Y@

முதல்வருக்கு நன்றி!

இது குறித்து சட்டசபையில், காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்எல்ஏ ஜோதிமணி பேசியதாவது: சட்டசபையில் இருக்கின்ற அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பயன்படுமாறு வாகனங்களையும், உதவியாளரையும் வழங்கிய முதல்வர் விஜய்க்கும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.block_Y



தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் அறிவித்த முக்கிய அறிவிப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை அறிவிப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


கருத்து சொல்லுங்கள் வாசகர்களே!

தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கார், பராமரிப்புக்கு மாதம் ரூ. 75 ஆயிரம், உதவியாளருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முடிவு பற்றி உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!

Advertisement