ஆதாரத்தோடு இருக்கு ஓபன் பண்ண வச்சிடாதீங்க; சட்டசபையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு

9


சென்னை: அத்தனையும் ஆதாரத்தோடு இருக்கு ஓபன் பண்ண வச்சிடாதீங்க; எதை எப்போ ஓப்பன் பண்ணணுமோ, அப்போ ஓப்பன் ஆகும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசி கொண்டிருந்த போது, தவெக, திமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன்; ஆதாரம், ஆதாரம் என்று கேட்கிறார்கள்.
ஒரு வாரம் முன் நிதியமைச்சர் 3 துறையை ஆராய்ந்து அதன் கோப்புகள் என்னுடைய மேஜையில் தான் இருக்கிறது என்று கூறினார்.

அவர் போகிற போக்கில் சொல்லவில்லை; அவை உண்மையில் என் மேஜையில் தான் உள்ளன; அத்தனையும் ஆதாரத்தோடு உள்ளன; அதை ஓப்பன் பண்ண வெச்சுராதீங்க, எதை எப்போ ஓப்பன் பண்ணணுமோ, அப்போ ஓப்பன் ஆகும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.


சிறப்பு வீடியோ!

ஆதாரம் கேட்ட திமுக எம்எல்ஏக்கள்; முதல்வர் விஜய் தரமான பதிலடி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement